Wednesday, June 23, 2010

தொடங்கியது செம்மொழி மாநாடு


கோவை, ஜூன் 23_ கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் குடியரசுத் தலைவர் பிர-திபா தேவிசிங் பாட்டீல் தொடங்கி வைத்துப் பேருரையாற்றினார்.
மாநாட்டில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற-னர். உலக மக்கள் ஒன்று திரண்டுள்ளனர் கோவை-யில். கோவை மாநகரமே விழாக்கோலமாய் காட்சி-யளிக்கிறது.
கோவையில் இன்று (23.6.2010) காலை 10.30 மணியளவில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கியது.
மாநாடு தொடங்கி-யதும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் சிவசிதம்பரம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். அதைத் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டுக்காக தயாரிக்-கப்பட்ட ஏ.ஆர்.-ரகுமான் இசையில் முதல்வர் கலை-ஞர் இயற்றிய மய்ய-நோக்குப் பாடல் ஒலி-பரப்பப்-பட்டது.
முன்னதாக மாநாட்-டிற்கு வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா தேவி-சிங் பாட்டீல் அவர்-களுக்கு தமிழக முதல-மைச்சர் கலைஞர் அவர்-கள் பொன்னாடை வழங்கி உலகத் தமிழ்ச்செம்-மொழி மாநாட்டு நினை-வுப்பரிசை வழங்கி சிறப்-பித்தார்.
மாநாட்டு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கல்
பின்னர் செம்மொழி மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரும், தமிழக துணை முதலமைச்சரு-மான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரை-யும் வரவேற்று பேசிய-தோடு, செம்மொழி மாநாடு தொடக்க-விழா-வில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக முதலமைச்சர் கலைஞர், நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், ஃபின்-லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோபர்ப்போலா, அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட், முனைவர் வா.செ.குழந்தைசாமி, இலங்கை நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கா.சிவதம்பி ஆகியோ-ருக்கு, உலகத் தமிழ்ச்-செம்-மொழி மாநாட்டின் நினைவாக நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்-பித்தார்.
தமிழக துணை முதல-மைச்சருக்கு செம்மொழி மாநாட்டின் தனி அலு-வலர் கா.அலாவுதீன், நினைவுப் பரிசு வழங்கி-னார். அதே போல் தமிழக அரசின் தலை-மைச் செயலாளர் கே.எஸ்.-சிறீபதி அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
தமிழ் அறிஞர்கள் வாழ்த்துரை
பின்னர் செம்மொழி மாநாட்டின் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பேரா-சிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வா.செ.குழந்-தை-சாமி, இலங்கை நாட்-டைச் சேர்ந்த பேராசிரி-யர் கா.சிவதம்பி ஆகி-யோர் வாழ்த்துரை வழங்-கினர்.
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
பின்னர் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறுபவர் ஃபின்-லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை வாசித்து தகுதியுரை நிகழ்த்தினார்.
பின்னர் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்-கள் கலைஞர் மு.கருணா-நிதி செம்மொழித் தமிழ் விருதை ஃபின்லாந்து நாட்டின் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா-வுக்கு வழங்கி சிறப்பித்-தார். அடுத்து ரூ.10 லட்-சம் காசோலையினையும் வழங்கினார். செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர்
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரை தமிழக ஆளுநர் பர்-னாலா வெளியிட, குடிய-ரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பெற்றுக்-கொண்-டார்.
பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு தமி-ழக முதலமைச்சர் கலை-ஞர் அவர்கள் நினைவுப்-பரிசு வழங்கி சிறப்பித்-தார். பின்னர் பேராசிரி-யர் அஸ்கோ பர்ப்போலா வாழ்த்துரை வழங்கினார்.
முதல்வர் கலைஞர்
அடுத்து மாநாட்டு தலைமையுரையான எழுச்சி உரையை தமிழக முதலமைச்சர் கலைஞர் ஆற்றினார்.
இதையடுத்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்-னாலா அவர்கள் சிறப்பு-ரையாற்றினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்-கள் முறைப்படி உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்-டைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை-யாற்றினார்.
உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாட்டின் தொடக்கவிழாவில் தமி-ழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.சிறீ-பதி இ.ஆ.ப. நன்றி கூறினார்.
உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு தொடக்க-விழா பிற்பகல் 12.15 மணி அளவில் நிறைவுற்றது

No comments:

Post a Comment